Tuesday, 10 February 2015

நீரிழிவை ஏற்படுத்தும் அரிசி

நீரிழிவை ஏற்படுத்தும் அரிசி




இந்­தி­யர்­களை பய­மு­றுத்­தும் கொடிய நோய் நீரிழிவு நோய். சர்க்­கரை நோய் வந்­து­ விட்­டால் எண்ணெய்ப் பண்டங்கள், இனிப்­பு­கள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புற­மி­ருந்தாலும் இந்நோய் மேலும் சில நோய்­களுக்கு வாயிற்­க­த­வாக இருப்­பது தான் நம்மை அச்­சத்­தில் ஆழ்த்தி உள்ளது. மருத்­து­வ­ரி­டம் சென்றால் தினமும் ஒரு மணி நேரம் நடை­ப­யிற்சி மேற்­கொள்­ளுங்கள் என்பார். அது நல்லதும் கூட. சர்க்­கரை நோயா­ளி­கள் அதி­க­மாக இருப்­ப­தற்­கான கார­ணங்கள் ஏராளம் உள்­ள­​ன.
இந்­தி­யர்­களின் மர­ப­ணுக்­கள்­தான் காரணம் என்று ஒரு புறமும் தட்ப வெப்ப சுற்­றுச்­சூ­ழல்­தான் பிரச்­சினையே என்று மறு­பு­ற­மும் உடல் உழைப்பு மிகவும் குறைந்­து­ விட்­டதை மறந்­து­வி­டக் கூடாது என்று பேசுவோர் இன்னொரு பக்­க­மும் நின்று பட்­டி­மன்ற பாணியில் தொடர்ந்து விவா­தித்து வரு­கின்ற­னர். சர்க்­கரை நோயைப் பற்றி அண்மைய ஆய்வு ஒன்று தகவல் வெளி­யிட்­டுள்ளது. ​
ஒவ்வொரு உணவும் வயிற்­றுக்­குள் போய் ஜீர­ண­மாகி, எவ்­வ­ளவு சீக்­கி­ரம் ரத்­தத்­தில் சர்க்­கரை­யின் அளவை அதி­கப் ­படுத்­து­கிறது என்பதைக் கணக்­கி­டு­வதற்கு ‘கிளை­செ­மிக் இண்­டெக்ஸ்’ (Gly­c­e­mic In­d­ex) என்று பெயர். சுருக்­க­மாக ‘ஜிஐ’. சுத்த சர்க்­கரை­யான குளுக்­கோ­ஸின் ஜிஐ 100. இதை அடிப்­படை அள­வு­கோ­லாக வைத்து மற்ற உண­வு­களை­யும் கணித்­தி­ ருக்­கிறார்­கள்.

                                                                                                     அஸ்ஸலாமு அலைக்கும் 

                                                                                    சிங்கப்பூர்லிருது அதிரை கச்சா வீட்டு ஹாஜா